Friday 3rd of May 2024 03:05:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
வரலாற்று பிரசித்திபெற்ற  நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய  உற்சவம் ஆரம்பம்!

வரலாற்று பிரசித்திபெற்ற நாகர் கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய உற்சவம் ஆரம்பம்!


வடமராட்சி கிழக்கில் சரித்திரப் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் நாகேஸ்வரப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.

ஆறாம் திருவிழாவான பாம்புத்திருவிழா முதலாம் திகதி வியாழக்கிழமையும், ஏழாம் திருவிழாவான கப்பல் திருவிழா 2 ம் திகதி வெள்ளிக்கிழமையும்,எட்டாம் திருவிழாவான வேட்டைத்திருவிழா 3 ஆம் திகதி சனிக்கிழமையும், ஒன்பதாம் திருவிழாவான சப்பறத்திருவிழா 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா 5 ஆம் திகதி திங்கட்கிழமையும், பதினோராம் திருவிழாவான கேணித்தீர்த்தத்திருவிழா. 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இடம்பெற்று வருடாந்த உற்சவம் நிறைவு பெறும்.

வருடாந்த உற்சவம் கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைக்கு அமைவாக நடைபெறும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE